அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்வதில் சிக்கல்: ஒரே தொகுதிகளை கேட்கும் தேமுதிக மற்றும் பாமக

Admin 1 year ago

சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரே தொகுதிகளை தேமுதிக, பாமக கேட்பதால் சிக்கல் தொடர்கிறது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தேமுதிக போட்டியிட பட்டியலிட்ட தொகுதிகளில் பாமகவும் போட்டியிட விருப்பம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை பதவியும் தேமுதிக கேட்கிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைவோம் என தேமுதிக உறுதியாக நிற்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிக கேட்கிறது. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க தேமுதிக தலைமை வலியுறுத்தியுள்ளது.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்