பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது குரு பூஜையில் கலந்து கொள்ளும் அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள்:ஏழுமலை

LOGI 1 year ago

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1955-ஆம் ஆண்டு  பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாகப் பர்மா சென்றார். அங்குப் பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள், பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காகத் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்துக் கொண்டிருந்த வேளையில், மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது. தேவர் இந்த முறை, தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியைப் பேணினார். இதன் காரணமாக, பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க, தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்தத் தேர்தலிலும், தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும், முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்