அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் புரட்சி தலைவி சின்னம்மா அவர்கள் வரும் 30ம் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் கலந்துகொள்கிறார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116 ஆவது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30 .10 .2023 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்திற்கு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் பிறந்தநாளை தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறோம் .இந்த பெருமைக்குரிய விழாவில் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம் .ஜி .ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழிவந்த கழகத் தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.